Jul 21, 2015

மறு அரிதார ப்ராப்ளம்ஸ்

என்டிடிவி’யின் சென்னை மண்டல ரிப்போர்ட்டர் பெண்மணி ஒருவர் (பெயரை மறந்துவிட்டேன்) ஒரு பத்திரிக்கை பேட்டியில் குறிப்பிட்டார் இப்படி…
 
பிரணாய் ராய் ஒருமுறை அவருக்கு திடீரென்று ஃபோன் செய்து அழைத்து, “ஹேய், ஒரு மகா கேவலமான ஒரு டிவி நியூஸ் கவரேஜ்….. எப்படி ஒரு செய்தி அறிக்கை செய்யக்கூடாது என்பதற்கான ஒரு க்ளாஸ்ஸிக் உதாரணம்…. அப்படிப்பட்ட விடியோ ஒன்றை பார்க்க விரும்புகிறாயா?” என்றாராம்.
“சொல்லுங்க பாஸ்! நிச்சயம் உபயோகமா இருக்கும். கண்டிப்பா பாக்கறேன்”, என்றாராம் இந்தப் பெண்மணி.
“நீ இன்னைக்கு நம்ம நியூஸ் சேனலுக்கு செய்திருக்கியே ஒரு செய்தி அறிக்கை. அதான் இன்னைக்கு காலையில கூட நம்ம சேனல்ல ஒளிபரப்பாச்சே! அதேதான். மறக்காம பார்த்துடு”, டொக்.
இப்படித்தான் இருந்தது சென்ற வாரம் நான் நம் தளத்தில் எழுதிய “மழையும் நீயே வெயிலும் நீயே” பதிவை நானே படிக்கும்போது. அரிதாரம் பூசி நாளான வடிவேலுவின் சொதப்பல்கள் போல… எழுதி நாளான கைகளுக்கு எழுத வருவேனா என்று அடம்.
என் பதிவை என்னாலேயே படிக்க முடியவில்லை.
பிய்த்துப் பிய்த்து அப்படி என்னதான் எழுதியிருக்கிறேன் என்று மீண்டும் இப்போது வாசித்துப் பார்க்கையில்…. “அடச்சீ”, என்று எனக்கே வருகிறது. சாரி, நண்பர்காள்! (சப்போஸ் நீங்கள் தப்பித் தவறி அந்தப் பதிவைப் படித்திருந்தால்….)
 
நான் எப்போதுமே கவனித்திருக்கிறேன், எனக்குப் பாட வரும் அளவிற்கு (aahem...)  ஒரு பாட்டைப் பற்றி எழுத வரமாட்டேன் என்று அடம் பிடிக்கும் குணம் இருக்கிறது. அதுவும் இந்த வேளையில் இப்படி எழுதப்போக அப்படி வந்து விழுந்து விட்டது.
 
குறையொன்றுமில்லை பாடலைப் பற்றி நான் எழுதியே தீரவேண்டும் என்று ஒருமுறை நட்பாஸ் அடம்பிடிக்க, நானும் எனக்கு வந்து விழுந்ததை எழுதி வைக்க…..  அது ”பகடை உருட்டத் தெரியாதவன் பரமபதம் ஆடின கணக்கில்” இருந்து தொலைத்தது அந்தப் பதிவு.
நட்பாஸ் என்னை எப்படியெல்லாம் வைதார் என்று நான் சொல்லவும் வேண்டுமோ?
என்ன சொல்ல வருகிறேன் என்றால்…. எழுத எழுததான் எழுத்து. இடையில் விட்ட இடைவெளி சுமாராகக் கைக்குப் பழகின flow’வையும் நாஸ்தி செய்துள்ளது.
இதற்கு ஒரே அருமருந்து தொடர்ந்து எழுதுவதும்…. முடிந்தவரை சோமீ டமிலனாக மீண்டும் உருமாறாமல் இருப்பதுவும்தான்.
பார்ப்போம்…..

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...