Jul 5, 2015

முப்பத்தியேழு டிகிரி செல்ஷியஸ்

 
 
 
தகிக்கிறது சென்னை என்றால் .அது மிகையில்லை.
 
மே, ஜூன் தாண்டி ஜூலை பிறந்து நான்கு-ஐந்து நாட்கள் ஆகியும் நிலைமை இப்படி இருப்பதுதான் படுத்துகிறது. தேவை ஒரு அவசர மழை. அவசரமாகப் பெய்து ஓயும் மழை இல்லை. நின்று நிதானித்து ஒரு நான்கு-ஐந்து மணிநேரம் பெய்யும் மழை. வருணா..... வா வா!
 
நேற்று மாலை ஏழு மணிக்கு சென்னையின் வெப்பநிலை 37* சி'யாக இருந்தது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
 
டெல்லி வெப்பநிலை இப்படிக் கொடூரமாக  இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மாலை ஆறு மணிக்கு மேலே டெல்லியில் 35*’க்கு மேல் வெப்பநிலை கண்டால் இங்கிருந்து பஞ்சம் பிழைக்கப் போன நம்மூர் நண்பர்களை ஆன்லைனில் பிடித்து “ என்னங்க சிவாஜி, இப்பிடி ஆகிப்போச்சி”, என்று சீண்டிக் கொண்டிருப்பேன்.
 
அன்புச் சகோதரர் மனோஜகுமாரர் பெங்களூரில் இருந்து நேற்று மாலை தொலைபேசியழைத்து - "ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா! ரொம்ப வெயில் அண்ணா பெங்களூரு! ஜூன் மாசம் கொஞ்சம் பரால்ல மாறி இருந்துச்சு. இப்போ 33* மாக்ஸிமம்..... கொளுத்துது இங்க”, என்றார்.
 
தம்பியார் சென்னையில் எட்டு வருஷம் குப்பைக் கொட்டியவர் என்பது பின் குறிப்பு.
 
"டேய்! நேர்ல பாத்தேன், மவனே கொண்டேபுடுவேன்", என்று போனை கட் மாடினேன்.
 
 
இதுதான் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையின் கலவர நிலவரம். பாத்து பதவிசா நடந்துக்கிடுங்க. நான் இதோ பப்ளிஷ் பட்டனை அமுக்கிவிட்டு எழுந்ததும் 108 சூர்யநமஸ்காரம் பண்ணலாம் என்று போய்க் கொண்டிருக்கிறேன்.
 
சூர்யாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!!!!
 
  

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...