Oct 21, 2010

புத்தக வெளியீட்டு விழா அழைப்பு

நண்பர்களுக்கு,

செங்கை பதிப்பகத்தின் வெளியீடாக வரவுள்ள டாக்டர்.ஷ்யாமா அவர்கள் எழுதிய "மகப்பேறு மகத்துவம்" நூலின் வெளியீட்டு விழா வரும் 23.10.2010 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு சென்னை-மயிலை லஸ் சர்ச் சாலை "ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹாலில்" நடைபெற உள்ளது.

பெண்கள் நல மருத்துவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நூலினை வெளியிட மங்கையர் மலர் பொறுப்பாசிரியர் திருமதி அனுராதா சேகர் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்கள். 

விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்:

அருணோதயம் திரு.அருணன் அவர்கள்,
சுவாமி விமூர்த்தானந்த ஜி (ஆசிரியர். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்),
திரு ஏ.நடராஜன் அவர்கள் (சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர்),
திரு கவிதா சொக்கலிங்கம் அவர்கள் (உரிமையாளர் - கவிதா பதிப்பகம்).

செங்கை பதிப்பகம் அரு.சோலையப்பன் அவர்கள் சார்பில் தங்கள் அனைவரையும் இவ்விழாவில் தங்கள் நண்பர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் மற்றும் "மகப்பேறு மகத்துவம்" நூலாசிரியர் அறிமுகத் தகவல்களை இணைத்துள்ளேன்.





3 comments:

natbas said...

ஏதோ நீங்கதான் புக்கு போட்டு எளுத்தாளர் ஆகி எங்கள மாதிரி ப்ளாகர்கள் கையில சிக்கி சின்னாபின்னமாக ரெடி ஆயிட்டீங்கன்னு ஆசை ஆசையா வந்து பாத்தா...

:(

பதிப்பாளருக்கு வாழ்த்துகள்.

ராம்ஜி_யாஹூ said...

yaa i too thought like natbas.

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ் ஜி & ராம் ஜி

இருவரது நல்லெண்ணத்திற்கும் நன்றி. அச்செய்தி விரைவில்.
மீண்டும் நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...