Nov 17, 2011

கைரேகையும் கைக்குட்டையும்

ந்த காலகட்டத்திற்கு சற்றும் ஒத்துவராத காதல்தோல்விப் பாடல் ஒன்று இடைச்செருகலாய் ஏழாம் அறிவு படத்தில் காணக்கிடைக்கும். சூர்யா ஸ்ருதிஹாசனைக் காதலிப்பதாய் சொல்ல, ”குப்பைல தூக்கிப் போடு உன் காதலை”, என்பார் ஸ்ருதிஹாசன். இந்தக் காட்சியைத் தொடர்ந்து இந்த “யம்மா யம்மா காதல் பொன்னம்மா” பாடல் வந்து குதிக்கிறது.

”காதல் ஒரு போதை மாத்திரை அதை போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை”, போன்ற வரிகள் அபத்தத்தின் உச்சகட்டம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு திராபை என நான் நினைக்கும் பாடலுக்கும் நாங்கள் படம் பார்த்தபோது பின்னணியில் தியேட்டரில் தொடர்ச்சியாக விசில் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. குறைந்தது அரைடஜன் விசில்கள் பாடல் தொடங்கி முடியும்வரை பாடலைத் தொடர்ந்துகொண்டே இருந்தன. அந்தப் பாடலோடு வாழ்க்கையின் தற்போதைய சூழல் ஒத்துப் போகும் கனவான்கள் யாரோ பாவம்.
__________________________




ங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளிந்து ஒளிர்ந்த விளக்குகளின் அரைகுறை வெளிச்சத்திற்கு நடுவே இரண்டு அல்லது மூன்று மேஜைகளில் மட்டும் தலைகள் தெரிந்தன. ஐஸ் பிடிக்கும் இடுக்கியும் கண்ணாடிக் கோப்பையும் மோதும் ஓசையும், எல்ஸிடி’யில் ஓடிக்கொண்டிருந்த மியூசிக் சேனலின் ஹிப்பித் தலையனின் பெண்மை கலந்த குரலும் வரவேற்றன. வாரயிறுதியைக் கொண்டாட்டமாய்த் தொடங்க பாருக்குப் போய் சுருதி ஏற்ற விரும்பி கிருஷ்ணா என்னையும் அழைத்து வந்திருந்தான். அவன் ஐந்து ரவுண்டுகள் முடிக்கும் வரை நான் மூன்று ரவுண்டுகள் கோகோ கோலாவை உள்ளே ஏற்றிக் கொண்டிருந்தேன்.

குடிக்கும் நண்பர்களுடன் குடிக்காத பார்ட்டிகள் போவதிலும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் உண்டு. அவர்களுக்கு எந்த நிலையில் சுருதி ஏறுகிறது என்பதில் தொடங்கி அவர்கள் செய்யும் அமர்க்களங்கள் ஒவ்வொன்றாக ரசிக்கலாம்.

முதலில் என்னை, “நீங்களும் சாப்புடுங்க”, என்று ஆரம்பித்து, “நானெல்லாம் சாப்டா நாடு தாங்காதுய்யா”, என்னும் வழக்கமான டயலாக் சொல்லி அவனை நான் அமர்த்த அடுத்து ஒரு நரித்தனமான சிரிப்பை சிரித்துக் கொண்டு என்னை சீண்ட ஆரம்பித்தான். “யோவ், நீ என்ன ஆபீஸ்ல பெரிய ஆள்ன்னா பெரிய இதுவா? ”, என்று என்னை ஏக வசன வம்பிழுப்பிற்கு இழுத்தான். தான் இத்தனை நாள் பேச நினைத்ததையெல்லாம் “போதைல இருக்கேன்”, என்னும் முகமூடியில் அவன் பேசியதாகத் தெரிந்தது.

இப்போது சுயபச்சாதாபத்திற்குத் தாவினான். முப்பதின் ஆரம்பத்தில் இருக்கும் கல்யாணமாகாத பையன் பேசும் விரக்தி வசனங்கள் எல்லாம் வந்து விழுந்தன. அதற்கும் அடுத்து, “ஒரு பொண்ணு ரொம்ப டிஸ்டர்ப் பண்றா கிரி”, என்றவனிடம், “அந்த பொண்ணுதானே”, என்று சமீபத்தில் அவன் ஆஃபீசில் ரெகுலராக நேரம் ஒதுக்கி தேடித்தேடிச் சென்று வழிசலாய் இவன் வழிந்து கொண்டிருக்கும் ஒருத்தியின் பெயர் சொல்லிக் கேட்டேன். யெஸ்! அவளேதான்!

“டேய்! அவளுக்கும் உனக்கும் கொறஞ்சது பத்து வயசு வித்யாசம் இருக்கும்”

“நோ கிரி, திஸ் ஈஸ் நாட் லவ்”

“அப்போ”

“ஐ டோண்ட் நோ”

“செக்ஸ்?”

“ம்ம்ம்ம் ஐ டோண்ட் தின்க் ஸோ. அதுவும் இல்லதான்”

“அப்போ உனக்கு எதுக்கு அந்த பொண்ணு பக்கம் இருந்து டிஸ்டர்பன்ஸ்”

“தெரியலையே”

“அவளுக்கு கல்யாண வயசுல ஒரு அக்கா இருக்கா. உனக்கு இப்பவே கல்யாணத்துக்கு லேட்”

“சொன்னனே கிரி எனக்கு கல்யாணம்லாம் வேணாம். ஜஸ்ட் அவகூட பேசிட்டு இருக்கப் புடிக்குது, அவ்ளோதான்”

”கீஞ்சுது கிருஷ்ணகிரி. கரெக்டா சொல்லு, டு யு வாண்ட் செக்ஸ் வித் ஹெர்”

”ஆக்சுவலி என் இண்டென்ஷன் அது இல்லை. பட், கிவன் எ சான்ஸ் ஐ மைட் நாட் ஸே நோ”

“போடாங்...!”

“நீங்களே கேள்வி கேட்டுட்டு நீங்களே போடாங்’னா எப்படி”

“அது சரி! இவ்ளோ தேடித்தேடி வழியறியே! அவளுக்கு ஒரு ஸ்பார்க்குமா அடிக்கலை?”

“அதெல்லாம் தெரியாது! ஆனா ரெண்டு மாசம் முன்னாடியே அவ எனக்கு ரக்‌ஷாபந்தனுக்கு ராக்கி கட்டிட்டா”

“அடங்கொய்யால....”

“அவ ரொம்ப உஷாரு! என்னை அண்ணா’ன்னுதான் கூப்பிடுவா”

“ங்________! அசிங்கமா பேசிடப் போறேண்டா”, எழுந்துவிட்டேன்.

“அதான் பேசிட்டீங்களே! ஒக்காருங்க”

காதலில் விழும் நூறில் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் எப்போதுமே காதல் விஷயத்தில் எமோஷனலாகவும் இப்படிப்பட்ட மடத்தனத்துடனும்தான் இருக்கிறார்கள். எதையும் யோசிப்பதில்லை. நான் ஆண் நீ பெண் போதும் வா காதலிக்கலாம் என்பதுதான் மனோநிலை.

நான் பார்த்தவரையில் பெண்கள் சதுரங்கம் ஆடும் லாவகத்தோடு தெளிவான லாஜிகல் யோசனைகள் + மூவ்களுடன்தான் செயற்படுகிறார்கள்.

இது இப்படியேதான் இருக்கும். இந்த பாட்டைக் கேட்டுவிட்டு நீங்கள் அடுத்ததைப் படிக்கப் போங்களேன்!


4 comments:

செல்வா said...

பெரும்பாலான ஆண்கள் இப்படி மடத்தனமாகத்தான் இருக்கிறார்கள் :))

தர்ஷன் said...

//பெரும்பாலான ஆண்கள் இப்படி மடத்தனமாகத்தான் இருக்கிறார்கள் //

எனக்கே சொல்ற மாதிரி இருக்கே, இதேப் பாடல் 90களின் பிற்பாதியில் ஒரு விஜய் படத்தில் வந்திருந்தால் இன்னும் செமையாக ஹிட்டடித்திருக்கும்னு நெனக்கிறேன்

மதி said...

ரசித்துப் படித்தேன்.. இந்தக் கோமாளித்தனங்கள் என்றுமே மாறப் போவதில்லை

Giri Ramasubramanian said...

வருகை தந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்!

Related Posts Plugin for WordPress, Blogger...