Feb 11, 2012

மடிப்பாக்கம் டு பம்மல்


வலிய வரவழைத்துக் கொண்டது போல்தான் தோன்றியது எனக்கே; இருந்தும் அந்த இருதுளி நீரைக் கண்ணிலிருந்து வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்னால். கடந்த ஒன்பது மாதங்களில் எத்தனையோ முறை அந்த வாசல் மிதித்து உள்ளே போயிருக்கிறேன். இருந்தும் கடந்த திங்கள்கிழமை காலை ஏழு மணி சுமாருக்கு அந்த வாசலில் எடுத்து வைத்த வலதுகால் அடி’தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆம்,  சென்னை பம்மலில் புதுமனை கட்டியிருக்கிறோம். புதுமனைப் புகுவிழா கடந்த திங்கள்கிழமை நல்லமுறையில் நடைபெற்றது. இந்த மாத இறுதிக்குள் மடிப்பாக்கத்திற்கு பைபை சொல்லிவிட்டு பெட்டியைத் தூக்க வேண்டியதுதான் பாக்கி.

நம் இணைய நண்பர்களை எம் புது இல்லத்தில் சந்திக்க இன்று சனிக்கிழமை (11/02/2012) ஏற்பாடு செய்திருக்கிறேன். மாலை நாலரை மணி சுமாருக்கு சந்திக்க எண்ணம். வருபவர்கள் இங்கே பின்னூட்டத்திலோ அல்லது என் தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும் (+91 988 480 8680). முகவரி விபரங்கள் தருகிறேன்.

ட்விட்டர் நண்பர் சுந்தரத்தமிழன் வீடு கட்டிய வரலாறை (!!!) நம் ப்ளாக்கில் எழுதுமாறு கேட்கிறார். முடிந்தமட்டில் எழுதுகிறேன். பார்க்கலாம்.

2 comments:

Rathnavel Natarajan said...

மனப்பூர்வ வாழ்த்துகள்.

virutcham said...

வாழ்த்துக்கள் கிரி

Related Posts Plugin for WordPress, Blogger...