Apr 3, 2012

நிமிஷக்கதை - லச்சுமி


இந்தக் கதையை தன் தளத்தில் பதிப்பித்து கௌரவம் தந்த நட்பாஸ் அவர்களுக்கு நன்றி.
”ராகவன், செக் புக் எடுத்துக்கிட்டு ரூமுக்கு வாங்க”
தனக்கானத் தனி அறையில் பெரியதொரு மேஜையின் பின்னால் அமர்ந்திருந்தார் மேனேஜர். வலது இடது புறங்களில் ட்ரேக்களில் ஃபைல்கள் தேங்கிக் கிடந்தன.
”மன்த் எண்ட் வந்துடுச்சி. நெக்ஸ்ட் மன்த் பெட்டி எக்ஸ்பென்சஸுக்கு கேஷ் ட்ரா பண்ணி வெச்சுக்கலாமே”
“பண்ணிடலாம் சார்”
”ஆபீஸ் எக்ஸ்பென்சஸ் ஃபோர்காஸ்ட் போட்டீங்களா?”
“இந்த மாசம் எதும் மாற்றம் இல்லை சார். போன மாசம் போலவே ஒன் பாய்ண்ட் டூ வேணும். நம்ம கிட்ட க்ளோஸ் ஒரு ஃபைவ் தவுசண்ட் இருக்கும். எனிவே, ஸேஃபா ஒன் பாய்ண்ட் டூ ஃபைவ் எடுத்துக்கலாம்”
“ஓகே, செக் எழுதுங்க. சீனியர் நாளைக்கு ஊருக்குப் போறாரு. இன்னைக்கே பாத்து செக்ல ஸைன் வாங்கிடுங்க”
செக் எழுதி மேனேஜர் ஒப்பம் வாங்கிக் கொண்டு, மேனேஜர் பார்த்து முடித்த தனக்கான ஃபைல்களை அவர் மேஜையிலிருந்து அள்ளிக்கொண்டு தன் இருக்கைக்குத் திரும்பினான் ராகவன்.
“க்ரிஷ்ணா, கொஞ்சம் மேல வர்றியா?”
இருபது செகண்ட்களில் க்ரிஷ்ணன் எதிரில் ப்ரசன்னமானான்.
“என்னய்யா? படியேறி வருவியா? இல்ல காத்துல பறந்து வருவியா?”, வழக்கமான பதிலற்ற சிரிப்பு சிரித்தான் க்ரிஷ்ணன்.
“இந்தா செக்கு, சீனியர் கிட்ட ஸைன் வாங்கிக்கோ. ராபர்ட்டை அழைச்சிட்டு பேங்க் போயி, ஒண்ணேகால் லட்சம், ட்ரா பண்ணிட்டு வந்துடு. சீக்கிரம் போயிட்டு வந்துடு, நான் இன்னைக்கு நேரத்துக்குப் போலாம்னு பாக்கறேன்”
அரை மணியில் கேஷ் செஸ்டில் ஒண்ணேகால் லட்சம் தஞ்சம் புகுந்தது.
ஃபோன் அடித்தது.
“சொல்லு பத்து”
“என்னங்க, சின்னவனுக்கு ஏதோ ஸ்கூல்ல ஃபேன்சி ஷோ’வாம்”
ஃபேன்சி ட்ரஸ் காம்படிஷனா?”
“ஆமாமா, அதுதான். நாளைக்குள்ள ஒரு ஐநூறு ரூபா கட்டணுமாம். வரும்போது ட்ரா பண்ணிட்டு வந்துடுங்க”
“பேங்க்’ல நாப்பத்தி ரெண்டு ரூபாதான் இருக்கு பத்து. கைலயும் நூத்தம்பதைத் தாண்டாது. உன்கிட்ட ஏதும் இல்லையா?”
“அதான் போனவாரம் மொத்தமா இருந்ததெல்லாம் வழிச்சித்தானே எடுத்துத் தந்தேன்”
”ரெண்டு நாள் பொறுக்கச் சொல்லேன் அவனை. சம்பளம் வந்துடும்”
“அதெல்லாம் பேசிட்டேன். அவன் நாளைக்குன்னா நாளைக்குன்னு ஒத்தைக் கால்ல நிக்கறான்”
“சரி சரி. இரு யார்கிட்டயாவது கேட்டு வாங்கிட்டு வர்றேன். கட் பண்ணு”
நண்பர்கள் சீனு, மனோஜ், ரவி – மூன்று பேருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பினான். “ஐநூறு ரூபாய் கிடைக்குமா? நான்கு நாட்களில் திருப்பித் தருகிறேன்”
--------------0000000000----------------
இந்தக் கதைக்கு லைவ்லிப்ளானட் தளத்தில் வந்த சில சுவாரசிய பின்னூட்டங்கள் இங்கே
image credit:  business.rediff.com

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை!

Giri Ramasubramanian said...

மிக்க நன்றி நாகராஜ் சார்!

Unknown said...

good story..

Giri Ramasubramanian said...

நன்றி பூபதி ராஜ்

Related Posts Plugin for WordPress, Blogger...