Apr 11, 2012

நான்கு சர்ர்ர்ரியலிசக் கவிதைகள்





கரிய ஊதாக் 
காகித வானில் 
படர்ந்த 
வெண்ணிற 
நீல நிறப் 
பிம்பத் துன்பம் 
நீ


கழுதை மூக்கு மேல் 
அமர்ந்த கருநிறக் 
கொசுவின் 
மூக்கு நுனி ரத்தத்தில் 
ஏனடி உன் 
வாசம்?


பல்லைக் கடித்தவாறு 
பைத்தியமா நீ 
என்ற உன் கேள்விக்கு 
இல்லையென 
இளிக்க எனக்கு 
இருபது நிமிடமானது


உனக்காய் நான் 
கசடற கற்ற 
கடப்பாரை நீச்சலும் 
நம் காதலில் 
கரைந்து காக்கா 
தூக்கிப் போச்சுதே

1 comment:

செல்வா said...

// பல்லைக் கடித்தவாறு
பைத்தியமா நீ
என்ற உன் கேள்விக்கு
இல்லையென
இளிக்க எனக்கு
இருபது நிமிடமானது//

அட்டகாசம்ணா .. சூப்பரா இருக்கு :)))

Related Posts Plugin for WordPress, Blogger...