May 9, 2012

ஐந்தில் மூன்றா நான்கா நாம்?


நடந்து வரும் ஐபிஎல்-5’ல் டெல்லி அணியும் கொல்கத்தா அணியும் ப்ளே-ஆஃப் (அல்லது அரையிறுதி) சுற்றுகளுக்கான இருக்கைக்கு கிட்டத்தட்ட தயாராகிவிட்டன.

புனே அணியும் ஹைதராபாத் அணியும் வெளியேறின அணிகள் பட்டியலில் சேர்ந்தாயிற்று.

இந்த அட்டவணையைப் பாருங்கள்! 

மும்பை அணியும் மிச்சமிருக்கும் ஐந்து ஆட்டங்களில் தன் பெர்த்தை இன்னும் ஓரிரு வெற்றிகள் மூலம் கிட்டத்தட்ட உறுதி செய்து விடலாம்.

ப்ளே-ஆஃப் சுற்றுகளில் இன்னும் ஒருவர் உள்ளே நுழையலாம். அதற்கான போட்டியில்தான் நான்கு அணிகள் இருக்கின்றன. மேலே இருக்கும் டேபிளில் பச்சை வண்ணம் தீட்டிக் கொண்டு நிற்கும் அணிகளைப் பாருங்கள்.

சென்னைக்கு மிச்சம் இருக்கும் ஆட்டங்களின் விபரம் இதோ! இவை அனைத்திலும் நல்ல ரன்ரேட்டுடன் சென்னை வெற்றி பெறவேண்டிய நிலையில் இப்போது இருக்கிறது.



2008 தொடங்கி இதுவரை நடந்துள்ள நான்கு ஐபிஎல் ஆட்டங்களில் சென்னை  மூன்று முறை இறுதிப் போட்டிக்கும், ஹைதராபாத் கோப்பையை வென்ற 2009’ஆம் ஆண்டு அரையிறுதி வரையும் சென்றுள்ளது. ஆக, இதுவரை அரையிறுதிச் சுற்றை எட்டா நிலை ஏற்பட்டதில்லை. இந்த முறையும் அதே நிலை தொடர வேண்டும் என்பதே சென்னைக்காரனான என் விருப்பம்.

ஆனால், அது நிறைவேறுவது அத்தனை எளிதில்லை! மேலே படத்தில் தலைவர் தோனி கையசைப்பதன் அர்த்தம் என்னவென்று இன்னமும் ஓரிரு ஆட்டங்களில் தெரிந்துவிடும். 

பார்ப்போம்!

1 comment:

Anonymous said...

இன்னுமா நம்பிகிட்டிருக்கீங்க..?

Related Posts Plugin for WordPress, Blogger...