Apr 6, 2010

நானும் புதுக்கவிதை எழுதுவேன்

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஜெயமோகனின் பழைய கோப்பிலிருந்து ஒரு இடுகையை எனக்குப் படிக்க இணைப்பை அனுப்பியிருந்தார். அதன் தலைப்பு.... நீங்களும் புதுக்கவிதை எழுதலாம்

ஜெயமோகனை விமரிசிக்குமளவு எனக்கு பப்பு இல்லாவிடினும், சமீபத்தில் படித்த ஒரு புதுக்கவிதையைப் பற்றி.... 

படித்தது தினமலர் வாரமலரில்.

பின்னால்!


* பரிதாபமாக இருக்கிறது...
லஞ்ச ஊழல் செய்து,
தலை குனிந்து,
முகம் மூடி...
* காவலர் துணையுடன்
அழைத்துச் செல்லப்படும்
அரசு அதிகாரிகளைக்
காணும்போது...
* கட்டுக் கட்டாகப் பணம்
நகை நட்டுக்கள்...
சொத்து சுகம்,
பங்கு பத்திரங்கள்,
வாகனங்கள்...
* மனைவிக்குத் தெரியாமல்
இத்தனையையும்
பதுக்கி வைத்திருக்க முடியாது
வீட்டிற்குள்...
* பேராசை... ஆடம்பரம்
ஆணவம்... துணிவு
இவைகளால் ஆடவரைத்
தூண்டுவதும் பெண்கள்தான்...
* ஆண்களின் வெற்றிக்குப்
பின்னால் பல பெண்கள்...
தோல்விகளுக்குப்
பின்னாலும் சில
பெண்கள்!

இந்தக் கவிதைக்கு (!!!) சிறப்புப் பதிவாக அங்கீகாரம் தரப்பட்டு ருபாய் 1250 பரிசு வேறு. என்ன கொடுமை ஆண்டவா...!!! பெண்ணினக் காவலராக தன்னை வரித்துக் கொள்ளும் அந்துமணி சார்....உங்க மேற்பார்வைல வர்ற வாரமலருக்கு இது தேவையா?

3 comments:

natbas said...

what is wrong
with the poem
that is what
i want to know

you literary fellows
think that hard to understand
is only poetry

common man
is watching you
silently

if you do not change
you will be changed

the poetry of the pundits
is dead
the poetry of the public
is born

it will grow despite
your opposition
intellects will be powdered
by the forces
of mass poetry.

beware!

Giri Ramasubramanian said...

அடிப்போளி!
இதல்லவா ஆங்கிலக் கவிதை. இலக்கணம் தந்து உதவியமைக்கு நன்றி நன்றி நன்றி!

Anonymous said...

உண்மை தான், அவர் பெயரையே வைத்திருப்பதற்கு உனக்கு தகுதி இல்லை . உன் பெயரை மாற்றி கொள் .

ஆயிரம் வேண்டாம் . எங்கே ஒன்று எழுது பார்க்கலாம் ?

Related Posts Plugin for WordPress, Blogger...