Oct 16, 2010

எந்திரன் - ஒரு தென்றலின் சூடான விமர்சனம்

ஏற்கெனவே இரண்டு நேர்மறை விமரிசனங்கள் நம் தளத்தில் எந்திரன் படத்திற்கு வெளியிட்டாயிற்று. இப்போது நம் தொடர் வாசகர் ஒருவர் ஒரு எதிர்மறை விமரிசனம் வரைந்துள்ளார். உள்ளது உள்ளபடி அவர் தந்ததை அப்படியே வெளியிட்டுள்ளேன். அவர் சொல்வது சரியா என நீங்கள்தான் சொல்ல வேண்டும்.


நான் நேற்று எந்திரன் படம் பார்க்க நேர்ந்தது. அந்த அதிர்ச்சியில்தான் இதை எழுதுகிறேன்.



எல்லாரும் எந்திரன் கதை, ஹாலிவுட் ஸ்பெஷல் எபக்ட்ஸ், ஐஸ்வர்யாவின் அழகு என்று நிறைய விஷயங்களைப் பேசி விட்டார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை

நீங்கள் இந்தப் படத்தை இதுவரை பார்க்கவில்லையானால் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஏதோ சயின்ஸ் பிக்ஷன் படம் பார்க்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு தியேட்டருக்குப் போகாதீர்கள். இது இன்னொரு ஷங்கர் படம், அவ்வளவுதான். இதற்கு முந்தைய படங்களில் செய்த அதே தவறுகளையே இதிலும் செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு உங்கள் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போய் என்ஜாய் பண்ணுங்கள், அவ்வளவுதான் சொல்ல முடியும். ஸி ஜி எபக்ட் எல்லாம் பிரமாதம், இந்த மாதிரியான கிராபிக்ஸை நீங்கள் எந்தத் தமிழ் படத்திலும் பார்த்திருக்க முடியாது.

ஆனால் இந்தப் படத்தில் அபத்தமாய் இருக்கிற சில விஷயங்களைப் பேசியே ஆக வேண்டும்.

நான் இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் என்று நினைத்துக் கொண்டு படம் பார்க்கப் போனேன். ஆனால் முதல் சீனிலேயே ஷங்கர் மேல் நான் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. அவர் சந்தானத்தையும் கருணாசையும் விஞ்ஞானிகள் என்று அறிமுகப்படுத்துகிறார்- ஆனால் பைக் மெக்கானிக்குகள் மாதிரி அவர்கள் டிரஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சந்தானத்துக்கும் கருணாசுக்கும் ஏன் ஒழுங்கான உடை கொடுக்கவில்லை என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.

ஷங்கருக்கு காஸ்ட்யூம் பற்றித் தெரியாதா என்ன? இல்லை அவர் வேண்டுமென்றுதான் அவர்களை இந்த சீனில் இப்படி வேடம் கட்டி விட்டிருக்கிறாரா? குறும்படம் எடுப்பவர்கள், பிலிம் காலேஜில் படிக்கும் மாணவர்களுக்கும் கூட இந்த மாதிரியான சின்னச் சின்ன விஷயங்கள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த மாதிரியான அபத்தங்கள் இருந்தால் படத்தை எப்படி ரசிப்பது? இதெல்லாம் சின்ன விஷயமாக இருக்கலாம், ஆனால் படம் பற்றிய பீலையே இத்தகைய தவறுகள் முழுதுமாக மாற்றி விடுகின்றன. உலகத்தில் இருக்கிற சகல விஷயங்களைப் பற்றிய அறிவும் இருக்கக்கூடிய ரோபோவை உருவாக்குகிற விஞ்ஞானி இப்படிப்பட்ட பைக் மெக்கானிக் மாதிரியான காமெடி ஆட்களையா உதவிக்கு வைத்திருப்பார்?





வசனங்கள் கூட அங்கங்கே அபத்தமாக இருக்கின்றன. வசனங்களை யார் எழுதியது என்றுத் தெரியவில்லை- டைட்டிலில் சுஜாதாவையும் சேர்த்து மூன்று பேர் பேரைப் போடுகிறார்கள்

ஒரு சீனில் வில்லன் ரோபோக்கள் ஒரு ஊரையே அழித்து அதில் உள்ள ஆட்களை துவம்சம் செய்கின்றன. அதற்கடுத்த காட்சியில் ஒரு போலீஸ்காரர் ஆர அமர அந்த விஞ்ஞானியிடம் வந்து மெல்லக் கேட்கிறார், "என்ன ரோபோ பண்ணி வெச்சுருக்கிங்க? இப்படி பண்ணுது?" என்று.

 ஒரு ரோபோ பல பேர கொலை செய்த பிறகு, ஊரையே நாசம் பண்ணின பிறகு இப்படித்தான் ஒரு போலீஸ் ஆபிசர் சாப்டா கேட்பாரா? சிரிப்புதான் வருது.


அப்புறம் இன்னொன்று, தீவிரவாதி ஒருவன் வில்லன் விஞ்ஞானியிடம் நான் ரோபோ செய்யச் சொல்லி ஆர்டர் கொடுத்தோம், அது என்ன ஆச்சு என்று கேட்கிறான். வில்லன்  விஞ்ஞானி சொல்கிறார், இன்னும் ரெடியாகலப்பா, எனக்கு இன்னும் ஒரு மாசம் டைம் குடு என்று.  இவர் சொல்றது எப்படி இருக்கு தெர்யுமா ,என் கிட்ட இப்ப காசு இல்ல ஒரு மாசம் டைம் குடு அடுத்த மாசம் திருப்பி தரேன் என்று சொல்ற மாதிரி இருக்கு . இப்படியா ஒரு சயின்டிஸ்ட் பேசுவாரு?
இந்த வகை அபத்தம் மாதிரியே இன்னும் பல அபத்தங்கள். சரி செய்திருக்கலாம் ஆனால் இந்தத் தவறுகள் ஸ்டோரி லைனில் எல்லா இடத்திலும் வருகின்றன.

என்னுடைய முக்கியமான கேள்வி என்னவென்றால் சன் க்ரூப் ஒன்றரை பில்லியன் பட்ஜெட் போட்டு செலவு பண்ண குடுத்திருக்கு. சூப்பர் ஸ்டார் உங்க படத்துல நடிக்கிறார். இதை வெச்சுக்கிட்டு ஒரு நல்ல, நிஜமான சயின்ஸ் பிக்ஷனா, ஆங்கிலப் படங்களின் தரத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதி எடுக்கும் தைரியம் உங்களுக்கு ஏன் இல்லை? ஏன் இது உங்களால் முடியாமல் போனது

இத்தனைக்கும் ஷங்கர் புது இயக்குனர் இல்லை. அவரே ஒரு நட்சத்திர இயக்குனர், அவருக்கு என்று ஒரு வால்யூ இருக்கு. இத்தனையும் இருந்தும், அவரே, தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்ல பயப்படுகிறார் என்றால், அது யாரால்தான் முடியும்?
.
.
.



3 comments:

natbas said...

ஒண்ணு ரெண்டு படம் போட்டிருந்தா பதிவு கொஞ்சம் ஜாலியா இருந்திருக்கும் இல்ல?

சிவராம்குமார் said...

ஷங்கர் தான் இயக்குர படத்திலே என்னைக்குமே ரிஸ்க் எடுக்க மாட்டாரு.... இன்னும் ஒரு நூறு கோடி சித்து கொடுத்தா கூட இன்னும் நாலு கொசுவை வெச்சு எக்ஸ்ட்ராவா சிஜி பண்ணுவாரு... அவ்வளவே... அதனால அவர் இயக்கம் படங்கள் தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கு எடுத்து போகும்னு நெனக்கிற நம்மதான் முட்டாள்கள்!

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்

பண்ணியாச்சு.

@ சிவா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மெத்த நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...