Mar 4, 2011

இரு கவிதைகள்



வலி பொறு

திராவக வீச்சத்தொடே
இந்த இன்னொருவனும்.
ஆதிநாள் வாசம் இன்றும்
நெஞ்சில் எழும்ப
சொல்லிக்கொள்ளாமல்
கண்ணிலே நீர்
வலிபொறுக்கச் சொல்லும்
இந்தப் பொறுக்கியிடம்
என் அசட்டுச் சிரிப்பினூடே
எப்படிக் கேட்பேன்
எந்த வலியை என?



எலக்கிய எளவல்...


கவிதை வருமா?
வாசிக்க வரும்
கதை?
அதுவும் வாசிக்க மட்டும்...
கட்டுரை எழுத?
ஏதோ சுமாரா...
எழுத்தாளனா நீ?
பின்ன?
மூணும் சரியா வர்லியே?
திட்ட வருமண்ணே?
விமர்சனம் சொல்றியா?
திட்ட... திட்டறதை சொன்னேன்.
அட எலக்கியம்... உள்ள வா தம்பி!

3 comments:

natbas said...

ஒருத்தர் ரெண்டு பேரை வெச்சு மொத்தமா எல்லாருக்கும் சர்டிபிகேட் தந்தாச்சு...

எப்படியோ, வசைபட வாழ்ந்தா சரி....

RAJA RAJA RAJAN said...

"அட எலக்கியம்... உள்ள வா தம்பி!"

அட்டகாசம். அருமை.

R. Gopi said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

Related Posts Plugin for WordPress, Blogger...