Sep 27, 2011

BPO துறை - சில கேள்விகள்


”கார்பரேட் கனவுகள்” வாசித்துவிட்டு எப்போதாவது சிலர் நம்மை போனில் அழைத்துப் பேசுவார்கள். எம் துறை சார்ந்த கேள்விகள் அவர்களிடம் இருக்கும். 

சமீபத்தில் அன்பர் ஒருவர் ஈமெயில் மூலமாக சில கேள்விகளைக் கேட்டிருந்தார். நான் அவருக்குத் தந்த பதில்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இது உங்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

உங்களிடம் இது தொடர்பான மேலதிகத் தகவல்களோ, மாற்றுக் கருத்துக்களோ அல்லது வேறு கேள்விகளோ இருப்பின் இங்கேயே பின்னூட்டமாகவோ அல்லது rsgiri <at> gmail <dot> com என்ற ஈமெயிலுக்கோ எழுதவும்.

நன்றி: http://bpo.biz


அன்புள்ள நண்பருக்கு

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். என் பதில்கள் இங்கே

WHATS THE SCOPE OF BPO IN COMING FUTURE?

இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளைப் பொறுத்தவரையில், பி.பீ.ஓ’க்களின் வளர்ச்சி ஏறுமுகத்தினில்தான் இருக்கும். 
அதற்கு இரண்டு காரணங்கள்

1) யு.கே. , யு.எஸ். போன்ற நாடுகளின் கரன்சி மதிப்பு நம்மைவிட அதிகமாக இருக்கும்வரை அவர்கள் நம்மிடம் வேலை கொடுப்பது நிற்காது.

2) அடுத்த இருபது முதல் முப்பது வருடங்கள் வரை வேலைக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டால் உயர்வாக இருக்கும். உழைக்கும் வர்க்கம் அதிகமாக இருக்கும் திசையில் வேலை குவிவதில் வியப்பேதும் இல்லையே!

HOW INDIA COULD BE A GLOBAL LEADER IF NOT THE JOBS ARE OUTSOURCED?

என் புத்தகத்தில் சொன்னதைக் குறிப்பிடுகிறீர்கள். மேலே குறிப்பிட்ட பதிலையே இங்கேயும் துணைக்கு அழைக்கலாம். நம் கரன்சி மதிப்பு உயர்ந்தாலேயன்றி, இங்கே வரும் வேலைகள் நிற்காது. ஆக, நம் கரன்சியின் மதிப்பு உயரும் தருணம் நாம் வளர்ந்த நாடு என்ற அங்கீகாரம் பெற்ற தருணம்தானே? அதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.

HOW ABOUT THE CRISIS SCENARIO AFFECT THE TOTAL IT INDUSTRY AND BPO AS WELL ?

ரெஸஷன் காலகட்டத்தில், பாதிப்பு விஷயத்தில் ஐ.டி. துறைக்கும் அவுட்சோர்சிங் துறைக்கும் சற்றே வித்தியாசம் உள்ளது. பொருளாதார மந்தநிலை நேரங்களில் அவுட்சோர்சிங் துறை வளர்ச்சி காணும் என்பதுதான் பொதுவான கணிப்பு. காரணம், வளர்ந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள், குறிப்பாக இந்த காலகட்டத்தில், தங்கள் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு நம் போன்ற நாடுகளை நாடுவது இயற்கைதானே?

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...