Mar 19, 2010

ங்கொக்காமக்கா நான் சாகலை!

தந்தியை விட வேகமானது வதந்தி! இது மொபைல் போன் காலத்திற்கு முன்னால் சொல்லப்பட்ட சொல்.

மொபைல் போன் கையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் நேற்று நம் தமிழர்கள் நடிகர் கவுண்டமணியை sms-ல் கொன்று கொண்டே இருந்தார்கள். நமக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததே, அது உண்மையா, இல்லையா? ஊர்ஜிதம் செய்தபின் இதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்ற பக்குவம் இங்கு யாருக்கும் இல்லை.

அவருக்கு ஆன்ஜியோக்ராம் சோதனை நடந்ததாகவும், விரைவில்  பைபாஸ் அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் விரைவில் குணமடைவார், வதந்திகளை நம்பவேண்டாம் என அவர் மகள் சொல்லியிருக்கிறார்.

 
தன் விதவிதமான நகைச்சுவை கதாபாத்திரங்களால் தமிழ்த்திரையுலகை மூன்று தசாப்தங்கள் ஆண்ட, சமீபத்தில் ஜக்குபாய் மூலம் ஒரு நல்ல come-back தந்த அந்தக் காமெடி அரசன் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

4 comments:

natbas said...

கவலைப்படாதீங்க தோஷம் கழிஞ்சது: பெல் இன்னும் பல வருடங்கள் இருப்பாரு (நானும் அவரோட ரசிகன்தான்)

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உங்களது மறுமொழி பெட்டியில் உள்ள Word Verification நீக்கிவிட்டுங்கள் .
அப்படி செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . சற்று முயற்சிக்கவும் .

மீண்டும் வருவான் பனித்துளி !

natbas said...

அடியேனும் அவ்வண்ணமே வழிமொழிகிறேன்...

Giri Ramasubramanian said...

நன்றி சங்கர் அவர்களே! செய்தாச்சு!

Related Posts Plugin for WordPress, Blogger...