Apr 5, 2010

தவறவிட்டது!

விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கரில் இன்று பங்கேற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு நான்கு வரிகள் பாட வாய்ப்பு கிட்டியது. அப்போது பாடிய சிறுமி பிரியங்காவின் தாயார் சின்னக்குயில் சித்ராவின் குரலிலும் மால்குடி சுபாவின் குரலிலும் மாறிமாறிப் பாடி அசத்தினார். குரல் அட்சரம் பிசகாமல் எந்தக் குரலில் பாடினாரோ அங்கே வந்து நின்றது. 


ஓரளவேனும் கொடிகட்டிப் பறந்திருக்க வேண்டிய குரல் எனத் தெரிகிறது. மீடியாக்களின் மூலம் குரல் அறிமுகம் கிடைக்கும் இன்றைய கால கட்டத்தில் பிறக்காதது அவரது துர்பாக்கியமே. மேடைப் பாடகியான அந்தத் தாயிடம், தான் தவற விட்டதை தன் மகள் பிடித்திடுவாள் என்ற நம்பிக்கை தெரிகிறது.

அவர் வேண்டுவதைத் தரட்டும் எல்லாம் வல்ல இறைவன். வாழ்த்துக்கள்!

2 comments:

பா.வேல்முருகன் said...

அங்கு வந்திருக்கும் எல்லா பெற்றோரின் கண்களிலும் ஒரு துடிப்பு தெரியும். அல்கா அஜித்தின் அப்பாவும் அம்மாவும் ரொம்ப ரொம்ப கனிவு.

அந்த நிகழ்ச்சியில ஒன்னே ஒன்னு மட்டும் புரியல. ஏன் அந்த தொகுப்பாளினி திவ்யா மட்டும் பூர்ணம் விஸ்வநாதன் குரல்-ல பேசுது.

Giri Ramasubramanian said...

@ Vels
அப்டியா? எதுக்கும் 2010 சூப்பர் சிங்கர்ல கலந்துக்க இருக்கறேன். அப்போ கேட்டு சொல்றேன் சார்.

Related Posts Plugin for WordPress, Blogger...