May 27, 2010

கர்மா - நிஜமா?

சிக்கலான விஷயங்களை எளிமையாகப் புரிந்து கொள்ளும் பக்குவம் நம்மில் பலருக்கும் இல்லை, இந்த "நம்மில்" முக்கியமாக என்னை சேர்த்துக் கொள்கிறேன்.

சிறு வயதில் இருந்து கர்மயோகம் பற்றிய புத்தகங்களைப் பல முறை படிக்க எத்தனித்திருக்கிறேன். எத்தனித்த அத்தனை முறையும் இரண்டே நிமிடங்களில் தூக்கம் அல்லது ஆயாசம் மிகுந்து படித்துக் கொண்டிருந்த புத்தகம் மறுபுறம் சரிந்து சென்ற அனுபவமே நேர்ந்துள்ளது.

சுமார் பத்து வருடங்கள் முன்பு ஒரு யோகப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது அங்கும் கர்மா பற்றிய ஒரு பகுதி இருந்தது. அங்கு எனக்குக் கிடைத்த விளக்கத்தில் ஒரு வார்த்தை கூட என் நெஞ்சில் நிற்கவில்லை.

அலுவலக நண்பர் ஒருவர், "கிட்டு மாமா", என எங்களால் செல்லமாகக் கொண்டாடப் படுபவர். வேதம், உபநிஷதம், விசாகா ஹரியின் காலட்சேபம் என இருக்கும் அவரது மேற்கோள்கள். அவரிடம் நான் இது குறித்து விவாதித்த போது அவர் தந்த விளக்கங்கள் கிறுகிறுப்பை மட்டுமே தந்தன.


என் எழுத்துத் திறமையின் மீதும் (!), அறிவுத்திறன் மீதும் (!!) அபார நம்பிக்கை கொண்ட என் மலேசிய நண்பர் ஒருவர் என்னிடம் கர்மாவிற்கும் பாவ புண்ணியங்களுக்கும்  இடையேயான தொடர்புகளை எழுதுமாறு ஓரிரண்டு முறைகள் கேட்டுக் கொண்டார். "எனக்கு என்னப்பா தெரியும்", என ஒப்புக் கொள்ளும் பக்குவமின்றி, "சரி கொஞ்சம் டைம் குடுங்க எழுதிடலாம்", என பதில் சொல்லி சமாளித்தேன்..

இந்த வேளையில்தான் நண்பர் நட்பாஸ் "யப்பா, எனக்கு உன் தளத்துல எழுத ஒரு வாய்ப்பைக் குடுப்பா", என நச்சரித்த வண்ணம் இருந்தார். "வாய்யா வா!, என்னோட எத்தனை பதிவுகளை மறைமுகமா கிண்டல் செஞ்சு, வஞ்சகப் புகழ்ச்சி அணி பாடி சந்தோஷப் பட்டிருப்பே. என்னோட பழகின கர்மபலனுக்கு எழுது கர்மா'ங்கற தலைப்புல ஒரு பதிவு"ன்னு கட்டளையிட்டேன்.

அவரும் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை புரிந்துகொள்ள முயற்சி செய்த வண்ணம் இருக்கிறேன். நாளை பதிவேற்றம் செய்கிறேன், நீங்களும் உங்கள் கர்மபலனை அனுபவியுங்கள்.
.
.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...