May 17, 2010

இங்கிலாந்து - தவமாய் தவமிருந்து

ஒன்றல்ல ரெண்டல்ல முப்பத்தைந்து வருடத் தவம் இது. இங்கிலாந்திற்கு இப்போதுதான் கைகூடி வந்திருக்கிறது.

உலக கிரிக்கெட் அணிகளில் என் கருத்தில் டாப் 2 அணிகள் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியும்தான். இன்று வரையில் கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக (ஒரு sportsmanship உடன்)  ஆடும் அணிகளாக இவை இரண்டை மட்டுமே நான் பார்க்கிறேன்.

உலகக்கோப்பை ஒன்றின் இறுதி ஆட்டத்தில் ஐந்தாவது முறையாக பங்கேற்கும் பெருமை பெற்றது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக சாம்பியன் கோப்பை, உலகக் கோப்பை போட்டிகளில் அதிக அளவு இறுதி ஆட்டங்களில் பங்கு கொண்ட பெருமை இங்கிலாந்திற்கு உண்டு.

ஆனால் இப்போதுதான் முதல்முறையாக கோப்பை வெல்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம், அவர்கள் வென்றது நான்கு உலகக் கோப்பைகளையும், ஒரு மினி உலகக் கோப்பையையும் வென்ற ஆஸ்திரேலியாவை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அவர்களது ஆஷஸ் எதிரியை.



எனக்கு எப்போதும் இப்படித் தோன்றியதில்லை. ஆனால் இம்முறை போட்டிகள் தொடங்கியது முதலே சொல்லிக் கொண்டிருந்தேன் இம்முறை இங்கிலாந்து கோப்பை வெல்லுமென்று.



நேற்று இங்கிலாந்து இன்னிங்ஸின் நேரலை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை எனக்கு. காலையில் எழுந்தே முடிவை தெரிந்து கொண்டேன். .ஆஸ்திரேலிய அணியை அறவே வெறுக்கும் எனக்கு "இன்பத் தேன்வந்து பாய்ந்தது காதினிலே".

உங்களுக்கு?

5 comments:

SShathiesh-சதீஷ். said...

எனக்கும் சந்தோசம் பந்துக்கு பந்து விளக்கத்துடன் என் பதிவு படித்துப்பாருங்களேன்
http://sshathiesh.blogspot.com/2010/05/t20_16.html

சுதர்ஷன் said...

mm..துடிப்பான் இளைஞர் அணி

Giri Ramasubramanian said...

@ Shathiesh & Sudharshan

உங்க வருகை மற்றும் கருத்திற்கு நன்றி!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நம்மள எவன் ஜெயிச்சானோ அவ்னுக்கு கிடைக்கலை என்கிற மகிழ்ச்சி..?

Giri Ramasubramanian said...

@ கிறுக்கல் கிறுக்கன்

ஹி ஹி....நிச்சயமா!

Related Posts Plugin for WordPress, Blogger...