Dec 25, 2009

அற்குப ஆங்கே செயல்


அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.





(நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்)


இந்தக் குறள் பற்றி கெளதம் கம்பீர் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால் நேற்று அவர் ஆட்ட நாயகன் விருது தனக்குத் தரப்பட்டதும் அதை உடன் விளையாடி சதமடித்த விராத் கோலியுடன் பகிர்ந்து கொண்டவிதம் அவர் ஒரு ஆக்ரோஷமான வீரர் மட்டுமல்ல ஒரு  சான்றோன் எனவும் காட்டியது. 


பின்குறிப்பு: 1987 உலகக்கோப்பையில் சுனில் கவாஸ்கர், தனது முதல் மற்றும் ஒரே, சதமடித்து விருது பெறுகையில் இதே போல் hat-trick விக்கெட்டுகள் சாய்த்த சேத்தனுடன் விருதைப் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...