Dec 18, 2010

இணையவெளியில் மெட்ராஸ் தாதா



மாமல்லனின் ஜெமோ நிலைப்பாடுகள் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. பிதொநிகு என் கற்பனை என விமா சொன்னது ஜெமோ-விமா இடையேயான விஷயமே. இடையே ஊடாடி அடிதடியில் ஈடுபட நாமொருவருமில்லை. எனினும், விமா'வின் தொடர் ஜெ தாக்குகள் அவரது புது புத்தக ரிலீசொடு அதை முடிச்சுப் போடசொல்கிறது.

எப்படியோ... இப்படியப்படி உணர்ச்சிவசப் பட்டு எழுதுகிறாரேயோழிய... சிலப்பல நேரங்களில் மனிதரின் ஜீனியஸ்தனம் பட்டுத் தெறிக்கிறது...

தன் தளத்தில் அவர் வடிக்கும் விஷயங்களை விடுங்கள்,ஒரு பின்னூட்டத்தில் மனிதர் எழுதிய கவிதை படித்து மிரண்டேனேன்றால் மிரண்டேன் அப்படி மிரண்டேன். இதுவும் ஜெமோ தாக்கு எனினும் இதில் உள்ள அனாயாசமான அதேசமயம் ஆழ்ந்த கவித்திறனை ரசித்தேன்.

அறம்

எதற்கும் அசையாத
எம்பெருமான் விஷ்னு
கருவறை துறந்து
உற்சவ மூர்த்தியாய்
உலா வருதல்
உனக்காக அல்ல தனக்காக

ஸ்வாமி ஏள்றார் என
தரைவீழும் மனுஷா கேள்

பொன்முலாமின் உள்ளிருக்கும்
காரியார்த்தக் கல்மனிதனைக் காண்

இங்கே டார்கெட் ஜெமோ'தான் என்றாலும் மோதிரக்கைக் குட்டு வாங்கினது என் நெருங்கின நண்பர் ஒருவர். இப்படி நான் எழுதுவதை அவர் க்ஷமிக்கணும்.

இத்தனை நாள் கழித்து இதுபற்றி நான் இங்கே எழுதக் காரணம், தலைவர் கொஞ்சம் இடைவெளிக்குப் பின் தன் தளத்தில் இன்று ஒரு கவிதை வடித்திருப்பதுதான். இப்போ டார்கெட் நம்ம அன்பிற்கும் பாசத்திற்கும் பண்பிற்கும் இப்போதைய சூழலில்  பரிதாபத்திற்கும் உரிய தேக எழுத்தாளர் அவர்கள்.

தேகக் கொசு
வெளியிட்டு இருப்பது
வெற்றுக் குசு


.
.
.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...