Dec 30, 2010

எவன்டி உன்ன பெத்தான்...

"எவன்டி உன்ன பெத்தான்....... " இப்படி ஒரு பாடல் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் சிம்பு நடிக்க உருவாகிக் கொண்டிருக்கும் "வானம்" திரைப்படத்தில்.  பாடலைக் கேட்டு ரசிக்க காதுகள் ஆயிரம் வேண்டும். 

யப்பா யப்பா யப்பா... யுவன் ஷங்கர் ராஜா சார்.... அப்புறம் அந்தப் பாட்டை எழுதின ஏதோ ஒரு சார்.... பெறகு அதைப் பாடித் தொலைத்த சிம்பு சார்.... உங்களுக்கெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் காலத்துக்கும் கடமைப் பட்டிருக்கு.

"ஊரு விட்டு ஊரு வந்து" போன்ற டப்பாங்குத்து ரகப் பாடல்களிலும் கூட "ஷண்முகப்ரியா" என்னும் அற்புத ராகத்தைக் கலந்து அற்புதங்கள் தந்த அந்தப் பண்ணையபுரத்துப் பட்டிக்காட்டானின் மகனா இது போன்ற ஒரு பாடலுக்கு இசை அமைத்தான் என நினைத்தால் "நிஜமாவே வலிக்குது" சார்!

அந்தப் பாடல் உருவான விதத்தை இங்கே சாம்பிளில் பாருங்கள். இசை ஞானம், சுருதி ஞானம் கொஞ்சமேனும் உள்ளவர்கள் மனதைத் திடப் படுத்திக் கொண்டு இந்தப் படுத்தல்களைக் கேட்கவும்.


பி.கு.: சென்ற வார வெள்ளிக் கதம்பத்தின் உள்ளே ஐந்தோடு ஒன்றாய் இந்தச் சரத்தைச் சொருகி இருந்தேன். கண்டும் காணாமலும் அடிக்கப்பட்டுவிட்டதோ என்ற கவலையில் தமிழ் கூறும் நல்லுலகம் பயனடைய இங்கே மறுபதிவாக...
.
.
.

4 comments:

Philosophy Prabhakaran said...

இது கெளதம் மேனன் தயாரிப்பு என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது... நீங்களே பாடலை பிரபலமாக்கிடாதீங்க...

Keerthana said...

ssss habba!! mudiyala! we shudnt call this a 'song'! but ths s already gettin hit! my frds are like "hey antha pattu kettiya' samaya irukku!! i guess cuz of the lyrics! :|

sweet said...

vayasana aalungalukku youth songz eppavum pidikkadhu

madhumidha

Giri Ramasubramanian said...

So sweet Madhumidha!

Thanks!

Related Posts Plugin for WordPress, Blogger...