Feb 2, 2011

குஷ்பூவைத் தேடி...



அப்படியொன்றும் இந்தப் பதிவினில் நீட்டி
முழக்கி யெழுதிட வேதுமில்லை.

குஷ்பு என்றொரு தலைப்பினில் பன்னிருதிங்கள்முன்
யாம் வரைந்தவோர் பதிவது.


எழுதிடத்தொடங்கின ஓரிரு திங்கள் கடந்துவிட்டதோர் 
கால கட்டத்தில் எழுதினோமதனை



நாமெழுதியவோர் ஆர்வக் கோளாறுப் பதிகம்
எனவும் அழைத்திடலா மதனை.


தமிழ்ச்சமூகம் அப்படியொரு வரவேற்பினை யளித்திடுமென

எழுதியபோழ்து யாம் எண்ணிவிடவில்லை

வரவேற்பெனில் வரவேற்பு கூகுளாண்டவர் துணைக்கொண்டு
நிகழும் மாபெரும் வரவேற்பது

நாளொன்றினில் குஷ்பு குஷ்புவெனக் குஷ்புவைத்தேடி
ஒருதச மாந்தரேனும் வருகின்றனரிங்கு.

எழுதினவோர் வருடந்தனில் வந்துசென்றவர் கணக்கு
மூன்றா யிரங்களைத்  தாண்டுது.

ஆண்டுகளாயிரமாயினும் எம்மம்மையின் புகழ் மங்காதிருக்குமென
வாலிபக்கவிஞன் சும்மாவா சொன்னான்.

ஜெயமோகனிடத்தே குஷ்புகுளித்தகுளம் தேடுநல் தமிழுலகம்
என்னிடந்தேடலில் ஆச்சர்ய மென்ன







No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...