Feb 2, 2010

"ஊர் ரெண்டுபட்டால் ....

...கூத்தாடிக்குக் கொண்டாட்டம்", வேறென்ன? வெறும் வாயை மெல்லும் செய்தி சேனல்களுக்கு அவல் போல் கிடைத்தது, சிவசேனா - ஆர்.எஸ்.எஸ். முட்டல்கள் (சார் அது முட்டாள்கள் இல்லீங்க, சரியா படிங்க, அப்புறம் எங்க வீட்டுக்கு ஆட்டோ வரப்போவுது). 

செய்தி சேனல்களுக்கு நம்மிடம் ஒரேயொரு தேவைதான், "நீ என்னைப் பாரு". நீ என்ன கேக்கறியோ அதுக்கு மேலே நான் தர்றேன். ஒண்ண ரெண்டாக்கணுமா? ஆக்கறேன். உடைச்சக்கடலைய மூணாக்கணுமா? அதுவும் ஆக்கறேன். எது வேண்டுமென்றாலும் செய்வார்கள் அவர்கள்.

சரி, நாமும் சற்றே அவல் மெல்வோம் வாங்க.

ஆர்.எஸ்.எஸ். தேசிய அரசியல் பண்ண வேண்டிய சூழலில் இருக்கிறது, அவர்களுக்கு அங்கேயும் அடி இங்கேயும் இடி. சிவசேனாவிற்கோ குண்டுசட்டிக் குதிரையேற்றம் போதுமானது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? அது இவங்கதான்.  "அதிதி தேவோ பவ" என்று சொல்வார்கள். அதிதி? அவங்களை மிதிதி, வெச்சிடுவோம் திதி என்கிறார்கள் சேனைகள். இப்போது ஆர்.எஸ்.எஸ். கூட அவர்கள் விருந்தினர் பட்டியலில் புதியதாய் சேர்ந்திருக்கிறார்கள் என்பது உப தகவல். வாங்கடி என்று வரிந்துகட்டி நிற்கிறார்கள் தாக்கரே தகப்பனும் மகனும்.

டேய், அதெல்லாம் சரி, உங்க ஊருல மருத்துவ அய்யாவும் மகனும் பண்ணாததையா எங்க ஊருல பண்ணிட்டாங்கன்னு எங்க மாமா மும்பைல இருந்து கேக்குறாரு நான் இத்தோட நிறுத்தறேன்.


தொடர்புடைய இடுகைகள்

2 comments:

Moulee said...

"டேய், அதெல்லாம் சரி, உங்க ஊருல மருத்துவ அய்யாவும் மகனும் பண்ணாததையா எங்க ஊருல பண்ணிட்டாங்கன்னு எங்க மாமா மும்பைல இருந்து கேக்குறாரு நான் இத்தோட நிறுத்தறேன்." lol classic.
BTW check the URL of this post in Indivine, the url has an extra ')'.

Giri Ramasubramanian said...

Thanks Moulee...for your comments as well as for notifying me about the bug I left....

Related Posts Plugin for WordPress, Blogger...