Jun 28, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦நுழையுமுன் - 1

உள்ளே நுழையுமுன்.... (1)



"கற்றதனால்  ஆய
பயனென் கொல்"
கந்தசாமி வாத்தியார் முன்
கொட்டாவி விடுகிறான்
கோவிந்தன்.

"படிக்காம போனா
பன்னி மேய்க்க 
வேண்டியதுதான்"
பாடமெடுக்கும்
அப்பா முன்
பல் குடைகிறான்
கோவிந்தன்.

"படிக்கலாம் வாடா"
அழைக்கும் பழனியை
படம் போகக் 
கூப்பிடுகிறான்
கோவிந்தன்

"படிக்கலன்னு வெய்யி
என்னைய மாதிரி
பி.பீ.ஓ'வுல
ஒதுங்க
வேண்டியதுதான்"
பையனுக்குப்
பாடமெடுக்கிறான்
கோவிந்தன்
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...