Feb 28, 2010

சுஜாதா நினைவலைகள்!

நேற்று எழுத்தாளர் சுஜாதாவின் இரண்டாம் வருட நினைவு நாள்!

அத்வைதம் பேசும் வீட்டில் பிறந்த எனக்கு விசிஷ்டாத்வைத சிந்தனைகளை தீவிரமாக ஊற்றி என்னை ஆழ்வார்கள் பைத்தியம் ஆக்கியதில் முக்கியப் பங்கு அவருடையது. (உபயம்: ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்). 

என்னுடைய இன்னொரு blog-ற்கு பெயரை அவரிடம்தான் களவாடினேன்.

என் எழுத்தில் அவர் பாதிப்பு தெரியுமாறு நான் எழுதுவதாய் அவரை நிறைய வாசித்தவர்கள் சொல்கிறார்கள்.

அவர் எழுத்தில் தொடாத இயல் ஏதேனும் இருக்கிறதா என நான் இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். fiction (காதல், சமூகம், கிரைம், மற்றும் பல), non-fiction (ஸ்ரீரங்கத்து தேவதைகள் வகையறாக்கள்), வரலாறு, அறிவியல், கம்ப்யூட்டர், நாடகம், பக்தி, கட்டுரை வகைகள் (கற்றதும் பெற்றதும்), அவ்வப்போது (may be இரண்டாம் தரத்தில்) சில கவிதைகள், இலக்கிய அறிமுக நூல்கள் (ஆழ்வார்கள், அகநானூறு, etc)...வேறு,.....

நான் அவர் எழுத்தில் இருபது சதம் படித்திருப்பேனோ என்னவோ! அவரை அணு அணுவாய் வாசித்தவர்கள் அவரை இழந்து தவிப்பது மிகவும் அதிகமாய் இருக்கும். Never Before என சில வியாபார விளம்பரங்களில் குறிப்பிடுவார்கள். அவர் ஒரு Never Before Never After எழுத்தாளர்.

2 comments:

natbas said...

simple'a unga unmaiyaana unarvukalai velippadutthittinga... super.

Giri Ramasubramanian said...

தேவரீர் ஆசிர்வாதம்...!!

Related Posts Plugin for WordPress, Blogger...