Apr 11, 2011

இந்தத் தேர்தலின் ஹீரோ - தொடர்ச்சி...

தேர்தலின் ஹீரோ யார் எனக் கேட்டு நான் எழுதிய முந்தைய பதிவிற்கு வழக்கம் போலவே பயங்கர (!!!) ரெஸ்பான்ஸ். வந்திருந்த நானூற்று சொச்ச பின்னூட்டங்களில் தேர்ந்தெடுத்த ஒன்றை மட்டும் இங்கே பிரசுரிக்கிறேன்.


ஹலோ சார்,



1 . முதலில் அரசியல் கட்சிகளை மட்டும் குறை கூறுவதை விடுங்கள்.. இந்த மக்களையும் கொஞ்சம் திட்டியிருக்கலாம்... அவர்களை யோசிக்க வைக்க என்னவெல்லாம் செய்ய முடியும் என்றும் எழுதியிருக்கலாம்... ஏன் திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான முடிவையே (மாற்றி மாற்றி ஒட்டுப்போடுதல்) எடுக்கிறார்கள் (றோம்) என்று யோசிக்கவேண்டும். 

2 . மக்களுக்கு இந்த அரசாங்கத்தில் எந்தெந்த துறையில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை... (நான் உட்பட) அதை ஒவ்வொரு துறையில் உள்ள உயர் அதிகாரிகள் அதை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்... அதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்... 



3. அரசாங்க தொலைக்காட்சி இருப்பது போல் ஏன் அரசாங்க செய்தித்தாள் இருக்ககூடாது.. அதில் ஒவ்வொரு மாதத்திற்கும் எந்தெந்த நகரங்களில் எவ்வளவு வருவாய்கள் எந்தந்த துறைகளில் வந்திருக்கிறது எவ்வளவு செலவுகள் எந்தெந்த துறைகளில் செய்திருக்கிறார்கள் என்று முழு விவரங்களை அறிவிக்க வேண்டும். (இது எல்லாம் நடைமுறையில் இருக்கிறது என்று கூட சொல்வார்கள், ஆனால் அதுவும் என்னை போல் ஆட்களுக்கு தெரியாது)
மக்களிடம் நிரோத் விளம்பரம் கொண்டு செல்வது போல, இதையும் மக்கள் ஒரு பாதுகாப்பான் உறவு அரசாங்கத்துடன் ஏற்ப்படுவதற்காக.



4. வீட்டு பட்ஜெட் மற்றும் நாட்டு பட்ஜெட் பார்ப்பது போல் ஒவ்வொருவொரும் தனது நகரத்தின் பட்ஜெட்டையும் பார்க்க வேண்டும்

தேர்தலில் 



1. ஒவ்வொரு கட்சியினரிடத்தும் முதல் பத்து அல்லது அதற்க்கு மேற்பட்ட முக்கிய வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டு அதற்கான தேவை மற்றும் இருப்புகளை ஆராய்ந்து ஒரு அறிக்கையை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அந்த அறிக்கையில் அதற்கு தேவை இருப்பது போல் மக்கள் ஒட்டு போடலாம்... 



2. இதனை ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற பெறப்போகின்ற நீதிபதிகளை அல்லது பெறவைத்து கூட நியமிக்கலாம்.



3. காசுவங்குபவன் இருக்கும் வரைதான் காசு கொடுப்பவனும் இருப்பான்.. அந்த காசு அவருக்கு (வேட்பாளர்) எப்படி வருகிறது என்று தெளிவாக்கினால் அந்த காசை மக்கள் கட்டாயமாக வாங்கமட்டர்கள், இல்லையென்றால் கிடைக்கும் வரை லாபம் என்ற மனப்பான்மைதான் தொடரும்.. இது மக்களின் எல்லாசெயல்களிலும் தொடர்ந்துவிடும் (மிகபெரிய ஆபத்தே இதுதான்) .



4.  நம்மூரில் எத்தனயோ அறிவு ஜீவிகள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள்.. அவர்களிடம் இக்கருத்துகளை விவாதிக்கலாம் (கால அவகாசத்துடன்) செயல் படுத்த எத்தனயோ இளைஞர்கள் இருக்கிறார்கள் (றோம்).

மக்கள் தான் என்றுமே ஹீரோவாக இருக்க வேண்டும். 

இது எனது ஆவல்... 


-சண்முகநாதன்
.
.
.

1 comment:

Rathnavel Natarajan said...

செய்திகள் சொல்வது கட்சிகளின் தொலைக்காட்சிகளை தடை செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்பே வர வேண்டும். கருத்துக் கணிப்பையும் தடை செய்ய வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...