Apr 30, 2011

கார்பரேட் கனவுகள் - ஒரு கடிதம்


வணக்கம்,
நண்பர் கிரிக்கு,

நலமா? உங்களுக்கு ஒரு குழந்தை இருக்குறது என்று நினைக்கிறேன். குழந்தை எப்படி இருக்கிறது? உங்களுக்கு இது என்னுடைய முதல் கடிதம் என்று நினைக்கிறேன். மேலும் இந்த கடித போக்குவரத்து தொடரட்டும். Cadbury chocolate உடன் தொடங்குவோம்.


 

சென்ற வாரமே உங்களின் புத்தகம் படித்து விட்டேன். இருந்தாலும் தாமதமான இந்த கடிதத்திற்கு மன்னிக்க வேண்டும். நிறைய பணிசுமை அதனால் எழுத முடியவில்லை. 

உங்களின் புத்தகத்தில் எளிய நடை, இருந்தாலும் நன்றாக இருந்தது. எழுத்தினூடே செல்லும் சிறு நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. BPO ஊழியர்கள் தூக்கத்தை எவ்வளவு சொர்க்கமாக கருதுகின்றனர் என்பதை சிறு நகைச்சுவையினூடே பொட்டில் அடித்தாற்போல சொல்லியது என்னை கவர்ந்தது. அலுவலகத்தில் பயன்படுத்தும் சில சங்கேத வார்த்தைகளுக்கு அளித்த விளக்கம் ம்ம் சூப்பர்!!!. 

பெரும்பாலும் பணியை பற்றியும், பணியில் சந்திக்கும் சிக்கல்களை பற்றியும் இந்த புத்தகம் பேசும் என நினைத்த எனக்கு ஏமாற்றமே!. புத்தகம் உங்களை சுற்றியுள்ள பணியாட்களை பற்றியே அதிகமாக பேசுகிறது. இது வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே பயன்படும். இடையில் பேய் கதை, காதல் கதை எல்லாம் அந்த ரகம் தான். இவை எல்லாம் உங்களின் கதை எழுதும் திறனை காட்டுகிறது. இது எல்லாம் இத்துறை மட்டும் அல்ல மற்றவையும் என்னால் எழுத முடியும் என்பதை கட்டியம் கூறுகிறது. "நேத்தைக்கு வரைக்கும் நான் பேமானி இன்னைலிருந்து நான் அம்பானி"(சரியாய் சொல்லிடேனா? ) மற்றும் "கூரிய பார்வை" என்பதை ஊசியில் நூல் கோர்க்கும் பார்வை போன்ற வரிகள் சிலாகிக்க வைக்கிறது.

புத்தகத்தின் தலைப்பான கார்ப்ரெட் கனவுகள் என்பது  புதிதாக இத்துறையில் நுழைய நினைக்கும் நண்பர்களுக்கு வழி காட்டும் என எண்ணிய எனக்கு பெப்பே என்று சொல்லிவிட்டது. மெதுவாக அங்கங்கு தொட்டு கொண்டு வருகிறதே ஒழிய விளக்கமாக இல்லை.

முக்கியமாக பணியாட்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையான உடல் சார்ந்த பிரச்சனைகளை அலசாதது ஏமாற்றம். இத்துறை ஊழியர்கள் அதிகமாக சந்திக்கும் Back-pain மற்றும் சீக்கிரம் சந்திக்கும் சர்க்கரை வியாதி போன்றவை விவாதிக்கப்படவில்லை.  அமர்ந்தே வேலை பார்க்கும் மற்றத் துறை ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், அவர்கள் காலையில் ஜாகிங் வாக்கிங் போன்றவை மூலம் கட்டுக்குள் இதை வைக்க முடியும், ஆனால் இத்துறை ஊழியர்களால் இவர்கள் பணிநேரத்தினால் அதையும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை! 

ஒபமாவின் சட்டம் குறித்த பார்வை அருமை. இத்துறைக்கு அமெரிக்காவில் இருந்து அவுட்சோர்ஸ் கிடைகிறது. ஆனால் அமெரிக்காவில் இருந்து மட்டுமே கிடைக்கவில்லை என்பது தெளிவு. இது மிக அருமையாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக அனைத்து நாடுகளும் இந்த சட்டம் இயற்றினால் அப்போது இந்தியா தன்னிறைவு கொண்ட நாடாக இருக்கும்!. இந்த கருத்து என்னையும் தலையாட்ட செய்தது, அருமை!!!. 

எங்க வேலை செய்யறீங்க என கேட்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் BPO என்றால் ஓ... BPL -ah என்று அவர்களாகவே முடிவு எடுத்து கொள்ளும் நண்பர்களை தவிர்த்து (பின்ன என்ன சொன்னாலும் புரியப்போறது இல்ல), BPO என்றால் ஓ கால் செண்டரா? என கேட்கும் என அறிவுஜிவி நண்பர்களுக்கு இந்த புத்தகத்தை பரிந்துரைக்கலாம் என்று இருக்கிறேன்.

இங்ஙனம்,  
வான்முகில் 

அன்பு நண்பர் வான்முகில் அவர்களுக்கு,
உங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி! என் மகன் அகில் நலமாக இருக்கிறான். நீங்கள் அனுப்பிய சாக்லேட் சுவை போலவே மனதிற்கு இனிப்பைத் தந்தது உங்கள் கடிதம். படித்த புத்தகத்திற்கு கடிதம் எழுதுவது என்கிற நல்ல செயலை எல்லோரும் செய்வதில்லை <நான் உட்பட>, உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எனக்குக் கடிதம் எழுதியமைக்கு நன்றிகள் பலப்பல.

புத்தகத்தின் ப்ளஸ் பாயின்ட்டுகளுக்கு நீங்கள் தந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. அதே போல் தாங்கள் சொன்ன டெவலப்மன்ட் பாய்ண்ட்களை குறித்துக் கொண்டேன்.  அடுத்த புத்தகம் (அ) அடுத்த பதிப்பில் அவற்றை சரி செய்ய முயல்கிறேன்.

தங்கள் நண்பர்களுக்கு இப்புத்தகத்தைப் பரிந்துரை செய்வதாகச் சொல்லியிருக்கிறீர்கள், அதற்கு என் "ஸ்பெஷல் தேங்க்ஸ்"!

அன்புடன்
கிரி
.
.
.

1 comment:

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள் கிரி.

Related Posts Plugin for WordPress, Blogger...